சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: ஜெ
சென்னை:
தமிழக பட்ஜெட் மிகச் சிறப்பானது, அறிவுப்பூர்வமானது, வளர்ச்சியை நோக்கியது என முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.
நிதியமைச்சர் பொன்னையன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில்,
நெடுஞ்சாலை வசதி, கிராமச் சாலைகள், மின்சார உற்பத்தி, நகர்ப்புற வளர்ச்சி, நீர் வினியோகம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு மிக அதிகமானநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி போகப் போகிறது.
அதே நேரத்தில் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு ஆதரவானது. கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கும், கிராமப்புற செழிப்புக்கும்நிறை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், இது வளர்ச்சியை நோக்கி, ஏழைகளுக்கு ஆதரவான, மிக அறிவுப்பூர்வமான பட்ஜெட்.
சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார் ஜெயலலிதா.
சட்டமன்றத்துக்கு முன்பே தேர்தல் வராது என ஜெயலலிதா கூறினாலும், அதற்கான அறிகுறிகளை பட்ஜெட்டில் பார்க்க முடிகிறதுஎன்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.