நெல்லை, குமரியில் வெயில் கொளுத்தும்!
திருநெல்வேலி:
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இந்த கோடை காலம் மிகக் கடுமையாகஇருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போதே கோடை காலம் தொடங்கி விட்டது. தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி குமரி வரைவெயில் கடுமையாக இருக்கிறது. அதிகபட்ச வெயில் சேலம், வேலூர் நகரங்களில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.இரு நகரங்களிலும் இப்போதே 100 டிகிரி அளவுக்கு வெயில் அடிக்கிறது.
இந்த ஆண்டு தென் மாவட்டங்களில்தான் குறிப்பாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்தான்கோடை காலம் மிகக் கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று மாவட்டங்களிலும் கடும் வெயில் அடித்து வருகிறது. அதை விடக் கொடுமையாக குடிநீருக்கு கடும்பற்றாக்குறை நிலவி வருகிறது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வற்றாத ஜீவ நதியாக கூறப்படும் தாமிரபரணி ஆறு மிகவும் சுருங்கிப் போய் விட்டது. சின்ன ஓடை போல இந்த நதிகாணப்படுகிறது. வெயில் கூடக் கூட இதுவும் வற்றும் அபாயம் உள்ளதாக நெல்லை மாவட்டத்தினர் மத்தியில் பீதிஏற்பட்டுள்ளது.
குற்றாலத்துக்கு அருகே இருக்கும் செங்கோட்டையிலும் குடிநீர்ப் பிரச்சினை இப்போதே தலைவிரித்தாடுகிறது.தென்காசியிலும் இதே நிலைதான்.
குமரி மாவட்டத்தில் தலைநகர் நாகர்கோவிலில் நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர்விநியோகிக்கப்படுகிறது. ஆனால் குடிநீருக்கு பெரிய அளவில் பிரச்சினை வராது என்று நகராட்சி ஆணையர்கூறினாலும் கூட குடிநீர் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
"அதிகாரப்பூர்வமாக" கோடை தொடங்குவதற்கு முன்பே இப்படியென்றால் கோடை தொடங்கிய பிறகு நிலைமைஎன்னவாகுமோ என்ற பயம் தென் மாவட்ட மக்களிடையே நிலவி வருகிறது.