ஜெயேந்திரர் முன் ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள ஜெயேந்திரர், காஞ்சிபுரம்காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்றநிபந்தனையை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன்வழங்கியுள்ளது. அப்போது, செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயேந்திரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தினசரி காலை 9மணிக்குசந்திரமவுலீஸ்வரர் பூஜையை ஜெயேந்திரர் மேற்கொள்வார். எனவே 10 மணிக்குள் கலவையிலிருந்துகாஞ்சிபுரம் வரமுடியாது.
எனவே கையெழுத்துப் போடும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி முருகேசன் இன்று விசாரித்தார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப்பதில்,சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிக்கு கையெழுத்திட்டால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications