காவல்துறை தத்தெடுக்கும் மீனவர் குப்பங்கள்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்னை மெரீனா கடற்கரை அருகே உள்ள இரண்டு மீனவர் குப்பங்களை சென்னை பெருநகர காவல்துறைதத்தெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னையும் ஒன்று. இங்கு திருவொற்றியூர்முதல் திருவான்மியூர் வரை 20க்கும் மேற்பட்ட மீனவர் குப்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்தக் குப்பங்களில் சிலவற்றை தத்தெடுத்து அவற்றை சீரமைக்க சென்னை பெருநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. தற்போது முதல்கட்டமாக பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம், சீனிவாசபுரம் நடுக்குப்பம் ஆகிய இரு குப்பங்களை காவல்துறை தத்தெடுத்துள்ளது.
இந்த இரு குப்பங்களிலும் உள்ள ஆண், பெண், குழந்கைள் எண்ணிக்கை, படித்தக் கொண்டிருப்போர், மீனவர்கள் எண்ணிக்கை உள்ளிட்டஅனைத்து தகவல்களையும் போலீஸார் சேகரித்துக் கொண்டுள்ளனர். இது முடிந்ததும் நிவாரணப் பணிகளை காவல்துறை மேற்கொள்ளும்.
இதுதொடர்பான பணிகளை ஆணையர் நடராஜ் உத்தரவின் பேரில் இணை ஆணையர்கள் சைலேந்திர பாபு, உமா கணபதி சாஸ்திரி,சுனில்குமார் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.