எஸ்.ஏ. ராஜா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

மதுரை :

முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜாவின் ஜாமீன் மனுவை 2வது முறையாக மதுரைஉயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

எஸ்.ஏ.ராஜா சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2வது ஜாமீன் மனு நீதிபதி கண்ணதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.எஸ்.ஏ. ராஜா தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் எஸ்.ஏ. ராஜாவை பரிசோதித்தார். ராஜாவின் உடல் நிலை தற்போது நன்றாகஇருந்தாலும், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிப்பது நல்லது என்று கூறினார். எனவே ராஜாவின் உடல் நிலை கருதி அவரைஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதாடுகையில், ராஜாவின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. அவரது உடல் நிலை சரியில்லாமல் போனால் தேவையானமருத்துவ வசதிகளை செய்து தர போலீஸார் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதிபதி கண்ணதாசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், மனுதாரர் உடல் நிலைகுறித்து தேவைப்படும்பொழுது மருத்துவ ஆலோசனை பெறலாம்.

அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்தால் அங்கு மாற்ற போலீஸார்நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை மனுதாரரிடம் வசூலித்து கொள்ளலாம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+