இது சர்வாதிகாரம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக எம்எல்ஏக்களை ஒட்டுமொத்தமாக, குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றியதன் மூலம் இங்கு நடப்பது சர்வாதிகாரஆட்சி என்பது உறுதியாகிவிட்டது என கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த அராஜக செயலை எல்லோரும் கண்டிப்பார்கள். சட்டமன்ற மரபுப்படி 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போது அதில்யாரையும் குற்றம் சாட்டக் கூடாது. அந்த மரபை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா செயல்பட்டிருக்கிறார்.

அப்படியே குற்றம் சாட்டினாலும், குற்றம் சாட்டப்பட்ட அவை உறுப்பினர் தனது நிலையை விளக்க அனுமதி தர வேண்டும். இங்கு அந்தஅனுமதியும் ஆற்காடு வீராசாமிக்குத் தரப்படவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசுவதற்கு அனுமதி கோரினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை சபாநாயகர் அவையை விட்டுவெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார். இது ஜனநாயகம் அல்ல. இங்கு நடப்பது சர்வாதிகாரம் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலினை கொல்ல சதி: ஆற்காடு

சட்டசபை சம்பவம் குறித்து ஆற்காடு வீராசாமி கூறுகையில்,

விளம்பர போர்டு நட என் தம்பி நடத்தி வரும் நிறுவனத்தினர் மரக் கிளையை ஆட்கள் வெட்டினார்கள். அந்த மரக் கிளையின் மதிப்பு ரூ. 50என்று தெரிந்தவுடன் அந்த வழக்கை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

இதைத் தான் பெரிய குற்றமாக முதல்வர் பேசினார். நான் பதில் சொல்ல அனுமதி தரவில்லை.

நான் மீண்டும் கூறுகிறேன். ஸ்டாலினைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்காக கடலூர் சிறையில் குண்டர் சட்டத்தில் உள்ள ஒருவரைவெளியில் விட்டு, ஸ்டாலினைக் கொன்றுவிட்டு பழியை அழகிரி மீது போட முயல்கிறார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

இதை நான் பொதுக் கூட்டத்தில் தெரிவித்ததால், உண்மை வெளியாகிவிட்ட ஆத்திரத்தில் என் தம்பியின் நிறுவனம் மீது ஒரு வழக்கைப்போட்டு, பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார்கள்.

சிறுதாவூரில் ஜெயலலிதா ரூ. 250 கோடியில் பங்களா கட்டியிருக்கிறார். இந்த உண்மை வெளியே வர ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம்சட்டசபையில் ஸ்டாலின் இன்று பேசுவதாக இருந்தது. அதைத் தடுக்கவே எங்களை வெளியேற்றினார்கள்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கூறுகையில், தமிழ்நாட்டில் எத்தனையோ கொலைகள் நடக்கின்றன. அதைப் பற்றி சட்டசபையில் பேசஅனுமதிப்பதில்லை. மரக் கிளையை வெட்டியதற்காக 110 வது விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசிப்பது வெட்கக்கேடு.

முதல்வரின் வீட்டில் நரியை சுட்டிருக்கிறார்கள். இதற்கு 110வது விதியின் விளக்கம் தருவாரா ஜெயலலிதா? என்றார்

நாடாளுமன்றத்தில் புகார்:

தமிழக சட்டசபை விவகாரம் இன்று மக்களவையிலும் வெடித்தது. தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திமுக,மதிமுக எம்பிக்கள் பேசினர்.

இதையடுத்து இது குறித்து உள்துறை அமைச்சருடன் பேசுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+