For Daily Alerts
Just In
பாக். செல்லும் கோவை பஞ்சாயத்து தலைவி
கோவை:
கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சித் தலைவி வி.ஆர்.சுகன்யா பாகிஸ்தான் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு சார்பில் பஞ்சாயத்து ராஜ் குறித்த கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 2பஞ்சாயத்துத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களில் சுகன்யாவும் ஒருவர்.
பட்டதாரியான சுகன்யா, தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து கருத்தரங்கில் உரை நிகழ்த்தவுள்ளார்.
13ம் தேதி கருத்தரங்கம் தொடங்குகிறது. 15 நாட்களுக்கு சுகன்யா பாகிஸ்தானில் இருப்பார். அப்போது பல்வேறு கிராமங்களுக்கும் அவர்செல்லவுள்ளார். அந்நாட்டு பஞ்சாயத்துத் தலைவர்களுடன் கலந்துரையாடவும் உள்ளார்.
Comments
Story first published: Wednesday, March 9, 2005, 5:30 [IST]