சோனியாவின் பினாமி பட்ஜெட்: ஜெ. கடும் தாக்கு
சென்னை:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சோனியா காந்தியின் பினாமி பட்ஜெட் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்பேசுகையில்,
இந்த அரசில் அமைச்சர்களுக்கு உரிய பங்கு தரப்படுவதில்லை. அரசு அதிகாரிகளைத்தான் மாண்புமிகு என்று அழைக்கவேண்டும் போலிருக்கிறது. அன்மையில் நடந்த காவல்துறை விழாவில் மேடையில் தலைமைச் செயலாளர் அமர்ந்திருக்கிறார்.அமைச்சர்கள் யாரும் அமர வைக்கப்படவில்லை.
உளவுத்துறை தகவல்களை வைத்து ஆளும்கட்சியினர் இயக்கப்படுகிறார்கள். அண்ணா வழியில் நடப்பதாக சொல்கிறீர்கள்.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவரது வழி.
வரியைக் குறைத்து வசதிகளைப் பெருக்குவது அண்ணாவின் கொள்கை. ஆனால், நீங்கள் வரியைக் கூட்டி வசதிகளைக்குறைக்கிறீர்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் தான் நிதியமைச்சர் பொன்னையன் பட்ஜெட்டையே போட்டுள்ளார். இதுநிதியமைச்சரின் பட்ஜெட் அல்ல, பினாமி பட்ஜெட் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, எனது வழிகாட்டுதலின்பேரில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஆர்.பிகூறுகிறார். அதில் ஒரு தவறும் இல்லை. இந்த மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் நிதி நிலை அறிக்கை தயாரிப்புக்கு வழிகாட்ட எனக்கு சட்டரீதியாக முழு உரிமை உண்டு.
இங்காவது நான் முதலமைச்சராக உள்ளேன். ஆனால் எந்தவித அரசுப் பொறுப்பிலும் இல்லாத சோனியா காந்தியின்வழிகாட்டுதலின் பேரில் மத்திய நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதே, அதற்கு எஸ்.ஆர்.பி. என்ன பதில் கூறப் போகிறார்?
அதுதான் உண்மையிலேயே பினாமி பட்ஜெட், சோனியாவின் பினாமி பட்ஜெட் அது என்றார் காட்டமாக.
எஸ்.ஆர்.பி: மொத்தத்தில் இந்த அரசு அண்ணா வழியில் நடக்கவில்லை.
ஜெயலலிதா: அரசு விழாவில் அனைவரையும் மேடையில் அமர வைக்கும் பழக்கம் இல்லை. நான் முதல்வராக மட்டுமல்லகாவல்துறைக்கு மந்திரியாகவும் இருக்கிறேன். அதனால் மேடையில் அமர்ந்தேன். சட்டம்-ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள்தலைமைச் செயலாளர் தான். அதனால் அவர் என் பக்கத்தில் அமர்ந்தார் என்றார்.












Click it and Unblock the Notifications