தளவாய் மீதான பாலியல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?
சென்னை:
சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது பெண் டாக்டர் கோமதி கூறியுள்ள புகார்களை விசாரிக்க சிபிஐக்குஉத்தரவிடப்படுமா என்பது குறித்து இன்று வெளியாகும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிய வரும்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் பணியாற்றி வரும் டாக்டர் கோமதி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும்,அதற்குப் பணியாததால் தன்னை பல இடங்களுக்கு அமைச்சர் இடமாற்றம் செய்து அலைக்கழித்தாகவும்கூறியிருந்தார்.
மேலும் செக்ஸ்ரீதியாகவும் அமைச்சர் தந்த சித்திரவதைகள் குறித்து உரியவர்களிடம் புகார் கூறியும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. எனவே இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் கோமதி.
இந்த மனுவை நீதிபதி சிவசுப்ரமணியம் விசாரித்தார். தளவாய்சுந்தரம் சார்பில் வழக்கறிஞர் ஜோதி, கோமதி சார்பில்வழக்கறிஞர்கள் வீரராகவன், கர்ணன் ஆகியோர் மற்றும் தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சோமயாஜிஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் வாதங்கள் முடிவுற்ற நிலையில், இதன் மீதான தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார் நீதிபதி கே.டி.சிவசுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications