ஈரோடு, சேலத்தில் திடீர் கனமழை: மூதாட்டி பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில்திடீரென கன மழை பெய்தது. இதில் ஒரு மூதாட்டி பலியானார்.
நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. பெரும் இடி மின்னலுடன் பெய்த இந்த மழை காலை 5 மணி வரைநீடித்தது.
இந்த திடீர் கன மழையால் ஈரோட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தேக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணப்பாளையம் என்ற இடத்தில்குடிசைகள், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
பவானி அருகே ஊத்துப்பட்டி என்ற கிராமத்தில் கன மழைக்கு மூதாட்டி ஒருவர் பலியானார்.
இதேபோல, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி, எடப்பாடி, கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் குன்னூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் இன்று காலை கன மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications