For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் : விசாரணையை முடிக்க மேலும் 3 வார அவகாசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொல்லப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணையைமுடிக்க மேலும் 3 வார கால அவகாசம் கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வீரப்பன் கொலை தொடர்பான தர்மபுரி ஆர்.டி.ஓ. விசாரணையை மார்ச் 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில், தர்மபுரி ஆர்.டி.ஓ.சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வீரப்பன்கொலை தொடர்பான விசாரணையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது. ஆனால் தடய அறிவியல்துறையினரின் அறிக்கை மட்டும் வர வேண்டியுள்ளது. எனவே விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைஎன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் விசாரித்து, மேலும் 3 வார கால அவகாசம் கொடுத்துஉத்தரவிட்டனர்.

அதேசமயம், தன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதிரடிப்படைத்தலைவர் விஜயக்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விஜயக்குமாரின்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும் இதுதொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X