குண்டு புரளி: விப்ரோ ஊழியர் மீது நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

விப்ரோ நிறுவனத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பியது அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்தான் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் டெல்லி போலீஸாரின் பிடியில் 2 தீவிரவாதிகள் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில்டேராடூனிலுள்ள ராணுவ மையத்தையும், பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களையும் தகர்க்கதிட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் 9ம் தேதி காலை பெங்களூர் எம்.ஜி.ரோட்டிலுள்ள விப்ரோசாப்ட்வேர் நிறுவனத்திற்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதையடுத்து போலீஸாரின் தீவிர சோதனை நடத்தினர். குண்டு ஏதும் சிக்கவில்லை, அது வெறும் புரளி தான் என்றுதெரியவந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விப்ரோ நிறுவன ஊழியரான பிரசாந்த் குமார் என்பவர் தான் புரளியைக்கிளப்பியவர் என்று தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸார் உஷாராக இருக்கிறார்களாஎன்று சோதிக்கவே இவ்வாறு வெடிகுண்டு புரளியைக் கிளப்பியதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

போலீஸார் பிரசாந்த் குமாரை பிறகு ஜாமீனில் விட்டு விட்டனர்.

பிரசாந்த் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+