வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை: இளங்கோவன்
சென்னை:
வாக்காளர்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. 20 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை மாற வேண்டும் என்றுமத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தும் உத்சவ்-2005 மாநாட்டை இளங்கோவன் தொடங்கி வைத்தார். பின்னர்பேசுகையில்,
இந்தியாவில் 45 சதவீதம் பேர் வாக்களிப்பதே இல்லை. வெறும் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை உள்ளது.
இது மாற வேண்டும். வாக்காளர்கள் அதிக அளவில் ஓட்டுப் போட முன்வர வேண்டும். அனைவரும் தங்களது வாக்குரிமையைப்பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரங்களை ரோட்டரி அமைப்புகள் போன்றவைமேற்கொள்ள வேண்டும்.
அனைவரும் சேர்ந்து வாக்களிக்கும்போதுதான் மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது சரியாகத் தெரிய வரும் என்றார்இளங்கோவன்.