சுனாமி: புதுச்சேரி கிராமத்தையும் தத்தெடுக்கிறார் விவேக் ஓபராய்
சென்னை:
தமிழகத்தைப் போலவே, பாண்டிச்சேரியிலும் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்கப் போவதாக நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தை நடிகர் விவேக் ஓபராய் தத்தெடுத்து அதைசீரமைத்து வருகிறார். அங்கு நிரந்தர வீடுகளையும் கட்டிக் கொடுக்கவுள்ளார்.
விவேக்கின் மனிதாபிமான பணிகளைப் பாராட்டி அவருக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சுனாமி தாக்குவதற்கு முன்பு வரை அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருந்தவர்கள்.எனவே அவர்களது கெளரவம் பாதிக்கப்படாத வகையில் அவர்களைக் கையாள வேண்டும்.
பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் 430 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 270 பேர் உயிரிழந்தனர். இங்கு 40பேருக்கு கண் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதய அறுவைச் சிகிச்சை மூலம் மறு வாழ்வு பெற்ற தேவனாம்பட்டினம்சிறுவன் முகத்தில் புன்னகையைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியே ஏற்பட்டது.
தேவனாம்பட்டினம் கிராமத்தை மீண்டும் பழையபடி மாற்றும் வரை தேவையான உதவிகளைச் செய்யவுள்ளேன் என்றார் ஓபராய்.
விவேக் ஓபராய்க்கு ரோட்டரி கவர்னர் பெஞ்சமின் செரியன் விருதை வழங்கினார். பான்யன் தொண்டு நிறுவனத்தின் வந்தனாவுக்கும்விருது வழங்கப்பட்டது.