கராத்தேவை அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்!
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜனை அடிக்க திமுகவினர் பாய்ந்ததால் பெரும் அமளிஏற்பட்டது.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பெரும்களேபரம் மூண்டது.
திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் கல்யாண சுந்தரம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து அதிமுக உறுப்பினர் வெற்றிவேல்பிரச்சினை எழுப்பினார்.
அவர் பேசுகையில், திமுகவினர் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, திமுக மண்டல மாநாட்டுக்குதிமுகவினர் சென்றிருந்த வேளையில் மாநகராட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கல்யாண சுந்தரம் கூறியுள்ளதாக வெற்றிவேல்தெரிவித்தார்.
இதற்கு கல்யாணசுந்தரம் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், ஆமாம் அப்படித்தான் நடந்துள்ளது. நடந்ததைத் தானே சொன்னோம்என்றனர்.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திமுக மண்டல மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைதூக்கிக் காட்டிய கராத்தே தியாகராஜன் ஏதோ கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கராத்தேவை நோக்கிப் பாய்ந்தனர். அவரது மேஜையை அவர்கள்தள்ளியதையடுத்து கராத்தே பதறியடித்தபடி எழுந்து நின்றார்.
அவரது இருக்கைக்கு முன்பாக திமுகவினர் கூடி கடுமையாக சப்தமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்குஅதிமுகவினரும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து திமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்துதிமுக கவுன்சிலர்களை குண்டுகட்டாகத் தூக்கி போலீஸார் வெளியேற்றனர்.












Click it and Unblock the Notifications