எங்களுக்கு பொய் வழக்குப் போட தெரியாது: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொய் வழக்குப் போடுவது, பழிவாங்குவது இதெல்லாம் திமுகவினருக்கு கை வந்த கலை. எனக்கோ, அதிமுக அரசுக்கோ பொய்வழக்கே போடத் தெரியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி பேசுகையில், குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அரசில்எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதாக உறுப்பினர் கூறுவதில் சற்றும் உண்மையில்லை. யார் மீதும் ஆதாரம் இன்றிவழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை.

ஆனால் கடந்த திமுக ஆட்சியின்போதுதான், என் மீதும், எனது அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீதும் திமுகவினர் பொய்வழக்குப் போட்டனர். எங்களை சிறையில் அடைக்கத் துடித்தனர்.

என் மீது போடப்பட்ட வழக்குகளில் 12 வழக்குகளில் நான் நிரபராதி என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன என்பதைபழனிச்சாமி மறந்து விடக் கூடாது.

தற்போதைய ஆட்சியில்தான் காவல்துறை மிகவும் சிறப்பாக, திறம்பட செயல்படுகிறது. நேர்மையான, திறமையானஅதிகாரிகளைப் பாராட்டி விருது வழங்குவதோடு, தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

வீடியோ கான்பரன்சிங் முறை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு பணம், அதிகாரிகளுக்குபணி நேரமும் மிச்சப்படுகிறது என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+