குருமூர்த்தி விவகாரம்: சட்டசபையில் பாஜக வெளிநடப்பு
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தி குறித்து பாஜக உறுப்பினர் எச்.ராஜா பேசியதை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கியதைக் கண்டித்துபாஜக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் எச்.ராஜாபேசுகையில்,
பழிவாங்கும் விதத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது... என்றார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் ராஜா தவறான தகவலை சபைக்கு தந்துகொண்டுள்ளார். அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்,
அதை ஏற்ற சபாநாயகர் காளிமுத்து, ராஜா பேசியைத அவைக் குறிப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர்.
பாஜக வெளிநடப்பு செய்வதை மற்ற எதிர்க் கட்சிகள் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தன.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி பேசுகையில், எதிர்க் கட்சியினரை பழி வாங்க காவல்துறையை அரசுதவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.இதற்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications