சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரசார் கோஷ்டி மோதல்
சென்னை:
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்புத் தலைவி டாக்டர் காயத்ரி தேவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் தலைவி விமலாகணேசனின் ஆதரவாளர்கள் (ஜி.கே.வாசன் கோஷ்டி), மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தைப் பூட்டி போராட்டம் நடத்தியதால்சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் காங்கிரஸ் தலைவியாக இதுவரை இருந்து வந்த விமலா கணேசனுக்குப் பதில், புதிய தலைவியாக டாக்டர் காயத்ரி தேவிசமீபத்தில் மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். ஆனால் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரப்பூர்வ தகவல்ஏதும் வரவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் ஜி.கே.வாசன் தன்னை தொடர்ந்து அவமதிப்பதாகவும், மகளிர் காங்கிரஸ் தலைவியாக தன்னைப் பொறுப்பேற்கவிடாமல் தடுப்பதாகவும், அலுவலகம் ஒதுக்காமல் தவிர்ப்பதாகவும் நேற்று செய்தியாளர்களிடம் சரமாரி புகார்களைக் கூறினார்காயத்ரி தேவி.
இது வாசன் கோஷ்டியைச் சேர்ந்த விமலா கணேசன் ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்தது. இன்று காலை விமலா கணேசனின்ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அங்குள்ள மகளிர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர்.
வாசனிடம், காயத்ரி தேவி மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரை சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய விட மாட்டோம்என்று அவர்கள் கோஷமிட்டனர்.
காயத்ரி தேவியை, முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன்தான் தூண்டி விடுகிறார் என்றும் அவர்கள் ஆவேசமாக கூறினர்.
மகளிர் காங்கிரஸைச் சேர்ந்தவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.