For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் பிடிக்க அம்மோனியா வாயு

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிக அளவில் மீன் பிடிப்பதற்காக, ஆபத்து நிறைந்த அம்மோனியா வாயுவைபயன்படுத்தி வருகின்றனர்.

கடலில் மீன் பிடிக்கும்போது இரட்டை வலை உள்ளிட்ட சில வலைகளைப் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.ஆனால் பல மீனவர்கள் இந்தத் தடையை மீறி இரட்டை வலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பல மீனவர்கள் இந்த வலைகளுக்குப் பதில் அம்மோனியா வாயுவை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

மீன்கள் உள்ள இடத்தில் அம்மோனியா வாயுவை செலுத்தி மீன்களை கொன்று பின்னர் அதை பிடிக்கின்றனர். இந்த மீன்களைசாப்பிட்டால், சாப்பிடுபவர்களின் உடலுக்கு நேரும் கேடுகள் குறித்து இந்த மீனவர்கள் கவலைப்படுவதில்லை.

மே மாதத்தில் கடல் மீன்கள் குஞ்சு பொரிக்கும் காலம் ஆதலால், அந்த சமயத்தில் 1 மாதத்திற்கு கடலில் மீன் பிடிக்க தடைவிதிக்கப்படும். எனவே அதற்குள் முடிந்த வரை அதிக அளவிலான மீன்களைப் பிடித்து லாபம் பார்க்கும் விதமாகவே இவ்வாறுஅம்மோனியாவை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து வருவதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X