டிஜிபி அலுவலகம் அருகே வாலிபர் படுகொலை
சென்னை:
சென்னை காவல்துறை தலைவர் (டிஜிபி) அலுவலகம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரீனா கடற்கரையோரம் உள்ள டிஜிபி அலுவலகத்திற்குப் பின்புறம் சுடுகாடு உள்ளது. இதற்கு இரண்டு வாசல்கள் உள்ளன.இதில் வடக்குப பகுதி வாசல் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.
டிஜிபி அலுவலகம் உள்ள பகுதி என்பதால் போலீஸார் நடமாட்டம் அதிகம் இருக்கும். இன்று அதிகாலை, சுடுகாட்டுக்கு அருகேஉள்ள கழிப்பறை முன் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் முழுவதும்வெட்டுக் காயங்களும் இருந்தன.
தகவல் அறிந்ததும் இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் தலைமையிலான போலீஸ் படை வாலிபரின் பிணத்தைக் கைப்பற்றிவிசாரணையை மேற்கொண்டது.
விசாரணையில் இறந்து கிடந்தவர் பாஸ்கர் என்று தெரிய வந்துள்ளது. இவர் மீது ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், மெரீனா காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. பாஸ்கருக்கு லாயிட்ஸ் சாலையில் சொத்து உள்ளது. அந்த சொத்து தொடர்பாகபிரச்சினை ஏற்பட்டு, பாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
பாஸ்கரின் உடலை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.
சட்டசபைக் கூட்டம் நடந்து கொண்டிருப்பதால், டிஜிபி அலுவலகத்திற்கு பின்புறம் கொலை நடந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பும்என்பதால் புகைப்படம் எடுக்க போலீஸார் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.
கொலையையே மறைக்காமல் விட்டார்களே!...












Click it and Unblock the Notifications