Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் பாதுகாப்பு இயக்க மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ள மொழிப் போர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள்தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:

தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்றுமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஆக்க வேண்டும் என்னும்கோரிக்கைகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.

அவ் வியக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு விளக்கக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் சென்று மக்களிடையே கருத்துப் பரப்புரை நடத்துவதென்றும்,முடிவாகத் திருச்சி அருகில் உள்ள பொன்மலைத் திடலில் மாபெரும் போராட்ட அறிவிப்பு மாநாடு நடத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் (22.3.2005), நான்கு திசைகளிலிருந்தும் ஊர்திப் பயணங்கள் புறப்பட்டுத், தமிழகமெங்கும் பயணம் செய்துஐந்தாவது நாள் (26.3.2005) அனைத்துக் குழுக்களும் திருச்சி மாநாட்டுத் திடலை வந்தடைகின்றன.

இப்பயணத்திற்குத் ""தமிழ்ப் பாதுகாப்புப் பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் குழுவிற்குப்பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதி பயணத்தைத் தொடக்கிவைக்கவுள்ளார்.

புதுவையிலிருந்து புறப்படும் குழுவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன்தலைமையேற்கிறார். புதுவை முதல்வர் ரங்கசாமி பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.

கோபிச் செட்டிப்பாளையத்திலிருந்து புறப்படும் குழுவிற்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன்தலைமையேற்கிறார். தணிக்கையாளர் இளமுருகு முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்தப் பயணத்தைத்தொடக்கி வைக்கிறார்.

கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் குழுவிற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன்தலைமையேற்கிறார்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் நல்லகண்ணு இநத்ப் பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.

நான்கு குழுக்களின் பயணத்திலும் ஒரே மாதிரியான முழக்கங்கள் எழுப்பப்படவுள்ளன. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்நோக்கங்களையும், இவற்றிற்கான நியாயங்களையும் விளக்கி, ஊர்வலப் பாதையெங்கும் துண்டறிக்கைகள் வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில் எந்தவிதமான வன்முறை முழக்கங்களுக்கோ, வன்முறைச் செயல்களுக்கோ இடமிருக்காது, முற்றிலும் அறவழிப்போராட்டப் பயணமாக விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நடைபெறும் மாநாட்டின் இறுதியில், போராட்டச் செயல்திட்டங்கள் அறிவிக்கப்படும்.

தமிழ்ப் பாதுகாப்புப் பயணம்-மாநாட்டிற்காக கீழ்க்காணும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு வரவேற்புக் குழு:

டாக்டர் ராமதாஸ், தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், டாக்டர் சேதுராமன், இளமுருகு, சோழநம்பியார் (இயக்கஒருங்கிணைப்பாளர்), டாக்டர் தமிழ்வேந்தன் (இயக்கச் செயலாளர்), இளங்குமரனார், டாக்டர் தெய்வநாயகம், மணியரசன்,திருச்சி செளந்தர்ராசன், புலவர் இறைக்குருவனார், புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் தமிழப்பனார், முனைவர் அருளி, தியாகு,முனைவர் அரசேந்திரன்.

பயண நிதிக்குழு:

டாக்டர் சேதுராமன், இளமுருகன், அ.கி.முத்து, செல்வப்பெருந்தகை, தமிழ்முழக்கம் சாகுல் அமீது, ஓவியர் சந்தானம்

பயண ஒருங்கிணைப்புக் குழு:

கோ.க.மணி, மீசை. சோமு, பத்மநாபன், வன்னியரசு, கு.சந்திரசேகரன், முகம் மாமணி.

மாநாட்டுப் பணிக்குழு:

இளங்குமரனார், பிரபாகரன், கேசவ.இராமலிங்கம், மணிவேல், கலைச்செல்வி , வழக்கறிஞர் பழ. ஆனந்தன், வீர. செங்கோடன்,மெய்.பெரியசாமி, பேரறிவாளன் ஆகியோர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+