தமிழ் பாதுகாப்பு இயக்க மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ள மொழிப் போர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள்தீவிரமாக நடந்து வருகின்றன.
இது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்றுமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஆக்க வேண்டும் என்னும்கோரிக்கைகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
அவ் வியக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு விளக்கக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் சென்று மக்களிடையே கருத்துப் பரப்புரை நடத்துவதென்றும்,முடிவாகத் திருச்சி அருகில் உள்ள பொன்மலைத் திடலில் மாபெரும் போராட்ட அறிவிப்பு மாநாடு நடத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் (22.3.2005), நான்கு திசைகளிலிருந்தும் ஊர்திப் பயணங்கள் புறப்பட்டுத், தமிழகமெங்கும் பயணம் செய்துஐந்தாவது நாள் (26.3.2005) அனைத்துக் குழுக்களும் திருச்சி மாநாட்டுத் திடலை வந்தடைகின்றன.
இப்பயணத்திற்குத் ""தமிழ்ப் பாதுகாப்புப் பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் குழுவிற்குப்பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதி பயணத்தைத் தொடக்கிவைக்கவுள்ளார்.
புதுவையிலிருந்து புறப்படும் குழுவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன்தலைமையேற்கிறார். புதுவை முதல்வர் ரங்கசாமி பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.
கோபிச் செட்டிப்பாளையத்திலிருந்து புறப்படும் குழுவிற்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன்தலைமையேற்கிறார். தணிக்கையாளர் இளமுருகு முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்தப் பயணத்தைத்தொடக்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் குழுவிற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன்தலைமையேற்கிறார்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் நல்லகண்ணு இநத்ப் பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.
நான்கு குழுக்களின் பயணத்திலும் ஒரே மாதிரியான முழக்கங்கள் எழுப்பப்படவுள்ளன. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்நோக்கங்களையும், இவற்றிற்கான நியாயங்களையும் விளக்கி, ஊர்வலப் பாதையெங்கும் துண்டறிக்கைகள் வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் எந்தவிதமான வன்முறை முழக்கங்களுக்கோ, வன்முறைச் செயல்களுக்கோ இடமிருக்காது, முற்றிலும் அறவழிப்போராட்டப் பயணமாக விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெறும் மாநாட்டின் இறுதியில், போராட்டச் செயல்திட்டங்கள் அறிவிக்கப்படும்.
தமிழ்ப் பாதுகாப்புப் பயணம்-மாநாட்டிற்காக கீழ்க்காணும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு வரவேற்புக் குழு:
டாக்டர் ராமதாஸ், தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், டாக்டர் சேதுராமன், இளமுருகு, சோழநம்பியார் (இயக்கஒருங்கிணைப்பாளர்), டாக்டர் தமிழ்வேந்தன் (இயக்கச் செயலாளர்), இளங்குமரனார், டாக்டர் தெய்வநாயகம், மணியரசன்,திருச்சி செளந்தர்ராசன், புலவர் இறைக்குருவனார், புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் தமிழப்பனார், முனைவர் அருளி, தியாகு,முனைவர் அரசேந்திரன்.
பயண நிதிக்குழு:
டாக்டர் சேதுராமன், இளமுருகன், அ.கி.முத்து, செல்வப்பெருந்தகை, தமிழ்முழக்கம் சாகுல் அமீது, ஓவியர் சந்தானம்
பயண ஒருங்கிணைப்புக் குழு:
கோ.க.மணி, மீசை. சோமு, பத்மநாபன், வன்னியரசு, கு.சந்திரசேகரன், முகம் மாமணி.
மாநாட்டுப் பணிக்குழு:
இளங்குமரனார், பிரபாகரன், கேசவ.இராமலிங்கம், மணிவேல், கலைச்செல்வி , வழக்கறிஞர் பழ. ஆனந்தன், வீர. செங்கோடன்,மெய்.பெரியசாமி, பேரறிவாளன் ஆகியோர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications