விபச்சார விடுதிகளில் இருந்து 5 பெண்கள் மீட்பு
சென்னை:
சென்னையில், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 அப்பாவிப் பெண்களை போலீஸார் மீட்டனர்.
சென்னை வானியர் கிழக்குத் தெரு, கே.கே.நகரில் உள்ள ரொயாலா நகர், ராமாபுரத்தில் உள்ள வள்ளலார் தெரு, கோடம்பாக்கம்ஆகிய இடங்களில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் 3 விபச்சார பெண் புரோக்கர்கள், நான்கு ஆண் புரோக்கர்கள் பிடிபட்டனர். இந்த வீடுகளில் வலுக்கட்டாயமாகஅடைக்கப்பட்டிருந்த 5 இளம் பெண்களையும் போலீஸார் மீட்டனர்.
இவர்கள் வீட்டை விட்டு பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி, விபச்சாரக் கும்பலிடம் சிக்கியவர்கள் என்பது விசாரணையில்தெரியவந்தது.
மீட்கப்பட்ட இந்த 5 பெண்களும் தற்போது சமூகநலத்துறையின் மகளிர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களதுகுடும்பத்தினரை போலீஸார் தொடர்பு கொண்டுள்ளனர்.
இவர்களில் 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர், இன்னொரு பெண் சென்னைசெங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications