ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அடுத்த மாதம் சாட்சிகள் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அடுத்த மாதம் சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், தினகரன், இளவரசி ஆகியோர் மீது ரூ. 66.6 கோடி அளவுக்கு சொத்து குவித்த வழக்கு,லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கு ஆகியவை பெங்களூர் தனி நீதிமன்றதில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்த விசாரணையின்போது முதல்வர் ஜெயலலிதா ஆஜராகவில்லை. அடுத்தகட்ட விசாரணைவரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவண நகல்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பிறகு சாட்சிகளுக்கு சம்மன்அனுப்பப்படும். அடுத்த மாத தொடக்கத்தில் சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications