கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 195 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅபாரமாக வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி,தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில்கடந்த 16ம் தேதி தொடங்கியது.
டாஸில் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்தது. இதில் திராவிட் அபாரமாக ஆடி சதமடித்தார்.
அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான், தனது முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 2வதுஇன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து 422 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.நேற்று ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 1விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.
இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்ததால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது. ஆனால் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவின் பந்து வீச்சுக்கு முன்னால் பாகிஸ்தான் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாசிய யூனிஸ் கான், யூசுப் யோகானா உட்பட அனைவரும் சொற்ப ரன்களில்ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் 226 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா,195 ரன்களில் அபாரமாகவெற்றி பெற்றது.
இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ராகுல் திராவிட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications