ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது!
சென்னை:
இலக்கிய உலகின் ஜாம்பவான் ஜெயகாந்தன், 2002ம் ஆண்டுக்கான ஞான பீட விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் கொண்டுள்ள ஜெயகாந்தன், இந்திய இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக 2002ம் ஆண்டின்ஞானபீட விருது பெறத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, விருதுக் குழுவின் நடுவரான டாக்டர் எல்.எம்.சிங்க்வி புதுடெல்லியில் தெரிவித்தார்.
ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, பாராட்டுப் பத்திரம், வேகதேவியின் வெண்கலச் சிலை ஆகியவற்றை பரிசாகக் கொண்டது ஞானபீட விருது.
இலக்கிய உலகின் உயரிய பரிசாக கருதப்படும் ஞானபீட விருதைப் பெறும் இரண்டாவது தமிழர் ஜெயகாந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மு ன்பு கடந்த1975ம் ஆண்டு அகிலன் இந்த விருதைப் பெற்றிருந்தார்.
தேசிய அளவில் வழங்கப்படும் பல விருதுகள், பாராட்டுக்கள் தமிழர்களுக்கு எப்போதுமே தாமதமாகவே வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில்எப்போதோ விருது கொடுத்துக் கெளரவித்திருக்கப்பட வேண்டிய ஜெயகாந்தனுக்கு, ஞான பீட விருது வெகு தாமதமாக வந்து சேர்ந்துள்ளது.
விருது குறித்து ஜெயகாந்தன் கருத்து தெரிவிக்கையில், ஞானத்தையே பீடமாகக் கொண்டவனுக்கு பீடம் எதற்கு? இது அங்கீகாரம் அல்ல, ஏற்கனவே கிடைத்தஅங்கீகாரத்தை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். எனது வாசகர்கள் ஏற்கனவே பாராட்டி, அங்கீகரித்து விட்டார்கள். அதுதான் எனக்கு உண்மையான விருது.அவர்களுக்கு எனது நன்றிகள்.
இந்த விருதால் தமிழர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். விருது தாமதமாக கிடைத்துள்ளது என்று கூறக் கூடாது. இந்திய இலக்கியத்திற்கு நான்ஆற்றிய பணிக்காக விருது கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். இந்திய இலக்கியத்திற்கு நான் ஏதோ சிறிதளவுக்கு செய்துள்ளேன் என்றுதானே இதற்குஅர்த்தம்? அதில் எனக்கு சந்தோஷம்தான். இதில் லேட்டாக கிடைத்து விட்டது, சீக்கிரமே கொடுக்கப்படவில்லை என்று கூறத் தேவையில்லை என்றார்ஜெயகாந்தன்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ஜெயகாந்தனுக்கு இப்போது வயது 70.












Click it and Unblock the Notifications