கருணாநிதியுடன், அர்ஜூன் சிங் சந்திப்பு!
சென்னை:
செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி சில பரிந்துரைகளை அளித்துள்ளதாக மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
சென்னை வந்த அர்ஜூன் சிங், நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,நீலகிரி காங்கிரஸ் எம்.பி. ஆர்.பிரபு, திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அர்ஜூன் சிங், சமீபத்தில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக கருணாநிதி சிலயோசனைகளை, பரிந்துரைகளைத் தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அத்திட்டங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசுபரிசீலித்து முடிவெடுக்கும் என்றார் அர்ஜூன் சிங்.