தஞ்சை மாநாட்டுக்கு தயாராக திமுகவினருக்கு கருணாநிதி அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சையில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டிற்கு இப்போதே திமுகவினர் தயாராக வேண்டும் என அக் கட்சியின் தலைவர்கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தஞ்சையில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் மண்டல மாநாடு நடைபெறவுள்ளதுஅனைவருக்கும் தெரியும்.
இதற்கான பணிகளை வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாநாட்டுக் களைப்பே இன்னும் தீரவில்லை, அதற்குள் அடுத்த மாநாடா என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது.அப்படியே நீங்கள் கூறினாலும், அந்த களைப்பைப் போக்கும் மாமருந்தாக தஞ்சை மாநாடு அமையும்.
கால தாமதமாக அழைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்போதே அழைக்கிறேன். தஞ்சை மாநாட்டுக்கு இன்றேதொண்டர்கள் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications