தொகுதி மறுவரையறை விரைவில் முடியும்: தாண்டன்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்குமுன்பாக தொகுதி மறு வரையறை முற்றிலும் முடிவடைந்து விடும் என்று தேர்தல் ஆணையர் பி.டி.தாண்டன்கூறியுள்ளார்.
புதுவை வந்த அவர் அங்கு தொகுதி மறு வரையறை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின்கருத்துக்களையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்தமாநிலங்களில் தொகுதி சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பாகவே தொகுதி சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து விடும் என்றார் தாண்டன்.












Click it and Unblock the Notifications