இன்னும் கிடைக்கவில்லை சுனாமி நிவாரணம்: கலெக்டர் அலுவலகத்தில் குவியும் புகார்கள்
சென்னை:
சுனாமி நிவாரண உதவிகள் கோரி சென்னை ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானபுகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
சுனாமி தாக்குதல் நடந்து இத்தனை நாட்களாகியும் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரண உதவிகள் சரிவரகிடைக்கவில்லை.
இதனால் நிவாரண உதவி கோரி சென்னை கலெக்டருக்கு புகார்கள் குவிகின்றன. இதுவரை 5,000க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட நிவாரணங்களின்போது வழங்கப்பட்ட ஒரு உதவியும் தங்களுக்குகிடைக்கவில்லை என பல மனுதாரர்கள் குமுறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு சரியாக நடைபெறவில்லை எனவும், உண்மையிலேயேபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் கொடுக்கப்படாமல், பாதிக்கப்படாத பலருக்கு முழு நிவாரண உதவிகள்போய்ச் சேர்ந்திருப்பதாகவும், இதில் லோக்கல் அரசியல்வாதிகள் விளையாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பை நடத்தாமல், தங்களது அலுவலகத்தில்உட்கார்ந்து கொண்டே பொதுவான பட்டியலைத் தயாரித்து அதன்படி நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகசீனிவாசபுரம் பகுதி மீனவர்கள் புகார் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications