அமெரிக்காவில் பள்ளி மாணவன் துப்பாக்கி சூடு: மாணவ, மாணவிகள் உள்பட 9 பேர் பலி
மின்னசோட்டா:
அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் பள்ளி மாணவன் தனது தாத்தா, பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுதன்னுடன் பயின்ற 5 மாணவ, மாணவிகளையும், ஆசிரியரையும், பள்ளியின் காவலாளியையும் சுட்டுக் கொன்றான்.
தன்னைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாருடனும் அவன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டான். இதையடுத்து தன்னைத் தானேஅவன் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்தத் தாக்குதலில் 15 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மின்னசோட்டாவின் ரெட்லேக் ஹை ஸ்கூலில் இச் சம்பவம் நடந்தது. தாக்குதலை நடத்திய மாணவனின் பெயர் ஜெப்.
முதலில் தனது வீட்டில் தாத்தாவையும் பாட்டியையும் சுட்டுக் கொன்ற ஜெப் பின்னர் ஆவேசத்துடன் பள்ளிக்கு வந்துள்ளான்.
அவனிடம் இரண்டு கைத்துப்பாக்கிகளும், ஒரு ஷாட் கன் துப்பாக்கியும் இருந்தது.
பள்ளிக்கு வந்தவன் முதலில் காவலாளியை சுட்டுக் கொன்றான். பின்னர் வெறியுடன் மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தினார். தங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிய ஜெப்பிடம் மாணவ, மாணவிகள் உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடியுள்ளனர்.ஆனால், அவ்களை சரமாரியாக சுட்டுள்ளான் ஜெப். இதில் 5 மாணவ, மாணவிகள் பலியாயினர்.
அப்போது தன்னைத் தடுக்க முயன்ற ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.
இதையடுத்து பள்ளியை ரெட்லேக் போலீசார் சுற்றி வளைத்தனர். ஜெப்பை சரணடையும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், அவர்கள் மீதும் ஜெப் சுட்டான். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுடவே, வகுப்பறைக்குள் ஓடிய ஜெப் அங்கு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
எதற்காக இந்தத் தாக்குதலை ஜெப் நடத்தினான் என்று தெரியவில்லை என எப்.பி.ஐ. காவல் படையின் செய்தித் தொடர்பாளர்மின்னபோலிசில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் நடந்துள்ள மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடுசம்பவம் இது.