வீரப்பன் வதம்: டிஆர்ஓ விசாரணை முடிந்தது
தர்மபுரி:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நடந்து வந்த தர்மபுரி மாவட்டகோட்டாட்சியர் விசாரணை முடிவடைந்தது.
வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் தமிழக அதிரடிப்படையினர் கடந்த அக்டோபர் 18ம் தேதி சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த நவம்பர் 1ம் தேதி தனதுவிசாரணையை டி.ஆர்.ஓ. பிரகாசம் தொடங்கினார்.
அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், பொதுமக்கள் 100 பேர், வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்கள், வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி, சகோதரிகள், கர்நாடக அதிரடிப்படையினர் 44 பேர், தடய அறிவியல் அதிகாரிகள்,பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் உள்ளிட்ட 196 பேரிடம் டி.ஆர்.ஓ பிரகாசம் விசாரணை நடத்தினார்.
வீரப்பன் கும்பல், அதிரடிப்படையினர் பயன்படுத்திய 38 துப்பாக்கிகள், வீரப்பனின் உடமைகள் உள்ளிட்டவையும்டி.ஆர்.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
டி.ஆர்.ஓவின் இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. விசாரணை தொடர்பான அறிக்கையை இந்த மாதஇறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் வரும் 31ம் தேதிக்குள் டி.ஆர்.ஓ. அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications