பெரியவர், இளையவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகல் தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதாகத் தெரிகிறது. அனேகமாகநாளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நகல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜெயேந்திரர், விஜயேந்திர்ர உள்ளிட்ட 5 பேர்ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ரவிசுப்ரமணியம் அப்ரூவராக உள்ளார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்படை போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீது கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குவழங்குவதற்காக நகல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

2 முறை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் வழங்கப்படவில்லை. செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நீதிமன்றஊழியர்களால், குற்றப் பத்திரிக்கையின் நகல் தயாக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

ஜெராக்ஸ் எடுக்கும்போது ஜெராக்ஸ் இயந்திரம் பழுதடைந்ததால், சென்னையிலிருந்து இன்னொரு இயந்திரம் கொண்டுவரப்பட்டு பிரதிகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது நகலெடுக்கும் பணி முடிவடைந்து பைண்டிங் வேலை நடந்துகொண்டுள்ளது. இன்று இரவுக்குள் இந்தப் பணி முடிந்து விடும் எனத் தெரிகிறது.

இந் நிலையில் வழக்கு தொடர்பாக நாளை ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில்ஆஜராகின்றனர். அப்போது குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாமீனில் விடுதலையாகிருக்கும் 5 பேர் மற்றும் ரவி சுப்பிரமணியம் ஆகியோரைத் தவிர மற்றவர்களுடைய சிறைக் காவலும்நாளை நீட்டிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+