கைது செய்வதை தவிருங்கள்: ஜெவுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாணவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும் ஆசிரியர்களை போலீஸார் கைது செய்வதை தவிர்க்க வேண்டும்என முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக நர்சரி, தொடக்கப் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, உயர்நிலைப் பள்ளிமற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜெயலலிதாவுக்குகோரிக்கைக் கடிதமாக அனுப்பி வைக்கப்பட்டுளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கிறிஸ்துதாஸ் கூறுகையில்,

தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் திட்டுவது சாதாரண விஷயம். இதற்காக வீட்டை விட்டுஓடும் மாணவர்களும், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அப்பாவிஆசிரியர்களும், பெற்றோர்களும் பொறுப்பில்லை.

பள்ளியை விட்டு விட்டு ஓடும் மாணவர்களுக்காக தவறு செய்யாத ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்களைக் கைதுசெய்வது நியாயமல்ல. போலீஸ் நடவடிக்கை, வழக்கு இவற்றுக்குப் பயந்து பல ஆசிரியர்கள் தற்போது தங்களதுகடமையிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர். மாணவர்களை கண்டிப்பதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

இதனால் தவறு செய்யும் மாணவர்களுக்கு இன்னும் வசதியாகி விடுகிறது. இது மாணவர்களின் நலனுக்குஉகந்ததல்ல.

இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனடியாக ஆசிரியர்களைக் கைது செய்வதை தவிர்த்து, உரிய விசாரணைகளுக்குப்பிறகு தவறு செய்தவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கைவிடுத்துள்ளோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+