For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை-மஸ்கட் விமானம்: நடுவானில் கோளாறு
மும்பை:
சென்னையில் இருந்து மஸ்கட் சென்று கொண்டிருந்த கல்ப் ஏர் நிறுவனத்தின் போயிங் விமானத்தின் ஒரு என்ஜின் நடு வானில்செயல்படாமல் போனது. இதையடுத்து அந்த விமானம் மிக அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இன்று காலை 213 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்து போனது. இதையடுத்துமும்பையில் அவசரமாகத் தரையிறங்க விமானி அனுமதி கோரினார்.
இதைத் தொடர்ந்து சத்ரபதி விமான நிலையம் எமெர்ஜென்சி லேண்டிங்குக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அந்த விமானம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பத்திரமாகத் தரையிறங்கியது.
Comments
Story first published: Thursday, March 24, 2005, 5:30 [IST]