மீண்டும் அந்தமானில் சுற்றுலா பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமியின் கோர தாக்குதலுக்குப் பிறகு அந்தமானில் அடியோடு நின்று போயிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும்தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்தமான் துணை நிலை ஆளுநர் ராம் காப்சே சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்குதலால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுவிட்டது. பல நிக்கோபார் தீவுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. தற்போதும் சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளில் அனைவரும் முகாம்களில் தான் வசிக்கிறார்கள்.

149 முகாம்களில் மொத்தம் 38,778 பேர் வசிக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் அவர்கள் தற்காலிக வீடுகளில் வசிக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.

சுனாமி தாக்குதலால் ரூ. 3,000 கோடி அளவுக்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் தவிர 53 தொண்டு நிறுவனங்கள்மற்றும் அரசு சாரா அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் செய்தனர்.

அந்தமான் தீவுகளை மறுகட்டமைப்பு செய்யும் பணி தொடங்கி விட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில்வரத்தொடங்கி விட்டனர். இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+