கருணாநிதிக்கு திடீர் பரிவு ஏன்?: ஜெ கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சிக் காலத்தில் காவல்துறையினருக்கு சலுகைகள் எதையும் வழங்காத கருணாநிதி இப்போது திடீரெனகாவல்துறைக்குப் பரிந்துபேசுவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருக்கும் மிகப் பெரிய பணியில்காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த அளப்பறியப் பணிக்காக அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கி வருகிறேன்.

இதைப் பொறுக்க முடியாமல், காவல்துறையினருக்கு கூடுதல் சலுகை வழங்க வேண்டும் என கருணாநிதி கூறியிருக்கிறார். இதுஎப்படி இருக்கிறது என்றால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதைப் போல உள்ளது.

கருணாநிதி ஆட்சி காலத்தில், அவர் காவல் துறையினருக்கு எத்தகைய சலுகைகளை வழங்கினார் என்பது பொதுமக்களுக்கும்,காவல்துறையினருக்கும் மிக நன்றாகத் தெரியும். காவலர் முதல் எஸ்.பி. வரையிலானவர்களுக்கு பாரபட்சம் காட்டி அவர்பல்வேறு படிகளை வழங்கினார்.

அதை மாற்றி தற்போது எனது ஆட்சியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிகளை வழங்க அதுவும், உயர்த்தி வழங்கஉத்தரவிட்டுள்ளேன்.

இப்படி இருக்கையில், காவல்துறையினருக்கு கூடுதல் சலுகைகள் வேண்டும் என்று கருணாநிதி கோயிருப்பது யாரைஏமாற்றுவதற்காக என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+