திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
பெளர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் எப்போது கிரிவலம் செல்லலாம் என்று அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை தற்போதுமிகவும் அதிகரித்து வருகிறது.
பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் அதிக பலன்கள்கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மாதம் பெளர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல நாளை (வெள்ளிக்கிழமை) உகந்த நாள் என்று கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பெளர்ணமி இன்று நள்ளிரவு 2.46 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 3.21 மணி வரை உள்ளது. எனவேஇந்த கால கட்டத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications