சிக்கிம் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
இந்திய- நேபாள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.1ஆக பதிவாகியதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வெளியே ஓடிவந்தனர்.
இதேபோல இந்தோனேஷியாவில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது6.6 ஆக பதிவாகியிருந்தது. இங்கு ஏற்பட்ட சேதவிவரம் குறித்த முழு விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
உயிர்ப்பலி அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications