ஜெ. சொத்து வழக்கு: விசாரணை மீண்டும் ஏப்ரல் 18க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 18ம் தேதிக்கு மீண்டும்ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த மாதம் 14ம்தேதி விசாரணை தொடங்கியது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர்ஆஜராகவில்லை. மாஜி வளர்ப்பு பிள்ளை சுதாகரன் மட்டுமே ஆஜரானார்.

சட்டசபைக் கூட்டம் நடப்பதால் விசாரணையில் கலந்து கொள்ள விலக்குக் கோரியதால், நீதிபதி பச்சாப்பூரா விலக்குஅளித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றும் ஜெயலலிதா, உயிர்த்தோழிசசிகலா உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகவில்லை.

இன்று நீதிமன்றம் கூடியதும், இந்த வழக்கில் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களைஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதியிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஆவணங்களைப் படித்து முடிக்க ஒரு மாதம் காலமாவது அவகாசம் வேண்டும். இல்லாவிட்டால் நான் களைப்படைந்துவிடுவேன் என்றார்.

இக் கோரிக்கையை ஏற்காத நீதிபதி, 3 வார அவகாசம் கொடுத்ததோடு வரும் ஏப்ரல் 18ம் தேதி, பதில் மனு தாக்கல் செய்யுமாறுஜோதிக்கு உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையையும் அதே தேதிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+