விடுதலைப் புலிகளின் புதிய டெலிவிஷன் சேனல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் புதிய தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சேட்டிலைட் சேனல் வவுனியா காட்டுப் பகுதியில் இருந்து ஒளிபரப்பப்படுகிறது.
விடுதலைப் புலிகள் வானொலி நிலையத்தை நடத்தி வருகின்றனர். இப்போது புதிதாக டெலிவிஷன் சேனலையும்தொடங்கியுள்ளனர்.
செயற்கைக் கோள் மூலம் செயல்படும் இந்த டெலிவிஷன் சேனல் சனிக்கிழமை வவுனியாவிலுள்ள காட்டுப் பகுதியில் தனதுஒளிபரப்பைத் தொடங்கியது.
"தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த டெலிவிஷன் சேனலுக்கு "கார்த்திகைப்பூசின்னமாக வைக்கப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகளின் தேசிய மலராகும்.
முதல் 2 வாரங்கள் தினமும் 15 நிமிடங்கள் செய்திகள் ஒளிபரப்பப்பாகவுள்ளன. பின்னர் 30 நிமிடங்களாக செய்தி நேரம்நீட்டிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் செயல்பட்டு வரும் "தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் விடுதலைப் புலிகள் ஒலிபரப்பும் செய்திகளை மறு ஒலிபரப்புசெய்யும். ஐரோப்பிய நாடுகளில் தினமும் இரவு 11.30 மணிக்கு இந்த செய்திகள் ஒளிபரப்பாகும் என்று விடுதலைப் புலிகள்தெரிவித்துள்ளனர்.
இந்தியா, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் தற்போதைக்கு இந்த செய்தி ஒளிபரப்பு இருக்காது. படிப்படியாக இந்தநாடுகளிலும் உலகம் முழுவதும் இதன் ஒளிபரப்பு விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications