மலேசிய தமிழ் எழுத்தாளர் ஆதிகுமணன் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசியத் தமிழ் எழுத்தாளரான ஆதி குமணன் நேற்று மரணமடைந்தார்.

"மலேசிய நண்பன் பத்திரிக்கை ஆசிரியரும், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஆதி குமணன்(வயது 55) நேற்று மலேசியாவில் மரணமடைந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம். பல வருடங்களுக்கு முன்பே மலேசியாவில்குடியேறிய ஆதி குமணன், 1970ல் "தமிழ் மலர் நாளிதழில் நிருபராக சேர்ந்தார்.

1990ல் இவர் "மலேசிய நண்பன் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற இவர், மலேசிய தமிழர்களின் முன்னேற்றத்திற்கும்,தமிழ் எழுத்தாளர்களின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டு வந்தார்.

மரணமடைந்த ஆதி குமணனுக்கு ஒரு மகன் உள்ளார். இவரது மரணத்ததையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளஇரங்கல் அறிக்கையில் பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் படைப்பாளனின் புரவலர் என்ற பன்முகத் திறமைகொண்ட தலைசிறந்த தமிழரை மரணம் பறித்துக் கொண்டுவிட்டது.

என் கண்ணீருக்கு என்னால் அணை கட்ட முடியவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், மலேசியதமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+