விரைவு நீதிமன்றங்களுக்கு நிதி: மதிமுக கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் ஆயுள்காலம் முடிவடையவுள்ள விரைவு நீதிமன்றங்களை தொடர்ந்து இயக்க, போதிய நிதியை மத்திய அரசுஉடனடியாக ஒதுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள விரைவு நீதிமன்றங்களின் ஆயுள்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து இயங்குவதற்குபோதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளதால் விரைவு நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்குமா என்பதில் சந்தேகம்எழுந்துள்ளது.
இந்த நிலையில் மதிமுக வழக்கறிஞர்கள் அணியின் கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில், தமிழகத்தில் விரைவுநீதிமன்றங்களைத் தொடங்க 11வது நிதிக் கமிஷன் 2000மாவது ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. 5 ஆண்டுகளுக்கு விரைவுநீதிமன்றங்களின் பதவிக்காலம் இருக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்திருந்தது.
ஆனால் தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்களும் 2003ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டன. எனவே இன்னும் 2 ஆண்டுகளுக்குஅதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் 1.25 லட்சம் வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. கீழ் நீதிமன்றங்களில் தற்போது3 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவு நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்கினால் இந்த நிலுவை எண்ணிக்கையைகுறைக்க முடியும்.
எனவே விரைவு நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்க போதிய நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications