For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் கடும் வெயில்: தகிக்கிறது வேலூர்
சென்னை:
தமிழகத்தில் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது.
வழக்கமாக அதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ளும் வேலூர் இம்முறையும் தப்பவில்லை. மார்ச் மாதத்திலேயே அங்கு கடும்வெயில் வீசி வருகிறது. நேற்று அங்கு 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது.
அடுத்தபடியாக சேலத்திலும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. அங்கு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.வழக்கமாக குழுமை நிலவும் கோவையில் கூட சென்னையை விட அதிகமான வெப்பம் தாக்கி வருகிறது.
நேற்று பாளையங்கோட்டையில் 99 டிகிரி, திருச்சியில் 98, கோவையில் 96, சென்னை, தூத்துக்குடியில் 95, கடலூர்,பாண்டிச்சேரியில் 92, கன்னியாகுமரியில் 91 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
Comments
Story first published: Wednesday, March 30, 2005, 5:30 [IST]