திமுக அமைச்சர்கள் சுத்த வேஸ்ட்: ஜெயலலிதா
சென்னை:
தமிழக திட்டங்களுக்கு மத்திய திமுக அமைச்சர்கள் எந்த வகையிலும் உதவுவதில்லை என்று சட்டசபையில் முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதன், பைக்காரா மின்சாரத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். அப்போதுஇடைமறித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
இந்தத் திட்டத்திற்கு திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பல வகையிலும் தடையாக இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில்சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்த பாலு, வேண்டுமென்றே இந்தத் திட்டத்திற்குகான அனுமதியைத் தராமல் இஸித்தடித்தார்.
பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றோம். அதன் பின்னரே இந்தத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கான பணிகளைச் செய்ய முடிந்தது. பைகாரா மின் நிலையத்தில் தயாராகும் மின்சாரத்தை நானும் அமைச்சருமாவீட்டுக்குக் கொண்டு போகப் போகிறோம்?
மக்களுக்குத் தானே இந்தத் திட்டம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அமைச்சர்கள் மக்கள் விரோதப் போக்கைகடைப்பிடித்து வருகின்றனர். அவர்களால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை.
இதனை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றார்.
முன்னதாக பேசிய அமைச்சர் விஸ்வநாதன், இந்த திட்டம் தாமதமானதால் தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ. 27 லட்சம் நஷ்டம்ஏற்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications