Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரின் இறப்பு சான்றிதழுக்காக போராடும் ஜீவஜோதி

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

Jeevajyothi with mother Thavamani in Kodaikanal
தனது கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஜீவஜோதி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 18ம் தேதிவிசாரணைக்கு வருகிறது.

ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமார் சரவண பவன் ஹோட்டல் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் அனுப்பி வைத்தகூலிப் படையால் கொல்லப்பட்டு கொடைக்கானல் மலைப் பகுதியில் உருட்டிவிடப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் ராஜகோபால் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அண்ணாச்சி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

ஆனால், பிரின்ஸ் சாந்தகுமாரின் இறப்பு சான்றிதழை இதுவரை ஜீவஜோதிக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மாநில அரசு,அதாவது கொடைக்கானல் கிராம அதிகாரி.

இதைத் தொடர்ந்து இறப்பு சான்றிதழ் கோரி கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஜீவஜோதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சாந்தகுமார் இறந்த இடமான டைகர் சோலை பகுதி நகராட்சியின் எல்லைக்குள் வரவில்லைஎன்பதால் இறப்பு சான்றிதழ் தர முடியாது என்று கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் கூறினார்.

இதை தொடர்ந்து நீதிபதி கமால் பாட்ஷா, கொடைக்கானல் தாசில்தாரிடம் இறப்பு சான்றிதழ் கேட்டு மனு செய்யுமாறுஜீவஜோதிக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன்படி கொடைக்கானல் தாசில்தாரிடம் இறப்பு சான்றிதழ் கேட்டு ஜீவஜோதி மனு தாக்கல் செய்தார். ஆனால் 2001ம்ஆண்டுக்கான இறப்பு பதிவேடு சார்பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் சார்பதிவாளரிடம் மனு செய்யுமாறு தாசில்தார்கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனது கணவரின் இறப்பை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி கொடைக்கானல் நீதிமன்றத்தில்ஜீவஜோதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கமால் பாட்ஷா இந்த வழக்கை ஏப்ரல் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+