சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க ஜெ. சதி: டி.ஆர்.பாலு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசுகையில், டி.ஆர்.பாலு மீது சரமாரியாக புகார்களைக் கூறினார்.
இதையடுத்து பாலுவின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து பலமுறை தான் வற்புறுத்தியதாகவும், அதை நிறைவேற மத்திய அரசுக்கு மனமில்லைஎன்பது போலவும் ஜெயலலிதா பேசியுள்ளார்.
அப்படியென்றால் ஆளுனர் உரையில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லையே, அது ஏன்?
சேது சமுத்திரத் திட்டத்தின் நிலைத்தன்மை குறித்து கேள்வி கேட்டு பிரதமர் அலுவலகம் எனது அலுவலகத்திற்கு குறிப்புஅனுப்பியதாக ஜெயலலிதா கூறியுள்ளதில் சற்றும் உண்மையில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வந்தமனுவை அவர்கள் எனது அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பியிருந்தனர்.
அந்த மனுவுக்கும் மார்ச் 4ம் தேதியே பதில் அனுப்பி விட்டோம்.
சர்வதேச அளவில் மதிப்பு வாய்ந்த நீரி அமைப்பின் மூலம் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந் நிலையில் அவசர கோலத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த மத்தியஅரசு முடிவு செய்ததாக ஜெயலலிதா கூறுவதை ஏற்க முடியாது.
இத் திட்டத்தை அவர் விரும்பவில்லை. அதற்காக என்னவெல்லாம் கூற முடியுமோ அதை கூறி வருகிறார். சேது சமுத்திரத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார் பாலு.












Click it and Unblock the Notifications