அடிமைகளா?: ஜெவுக்கு நல்லகண்ணு கண்டனம்
சென்னை:
கருணாநிதியின் அடிமைகள் என எதிர்க்கட்சியினரை முதல்வர் ஜெயலலிதா விமர்சித்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் ஆளுங்கட்சியினர், முதல்வர், அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் பேசஅனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சியினர் மீது புகார்களைக் கூறினால் அதற்கு விளக்கம் அளிக்கவும் எதிர்க்கட்சியினருக்குஉரிமை மறுக்கப்படுகிறது.
இந் நிலையைக் கருத்தில் கொண்டுதான் திமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என எங்களதுகூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து சபையை ஒரு வாரத்திற்குப் புறக்கணிப்பது என ஒருமித்த முடிவைஎடுத்தோம்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினரை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.கருணாநிதியின் அடிமைகள் என எதிர்க்கட்சியினரை மிகக் கடுமையாக கூறியிருக்கிறார் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால்தான் தினசரி ஏதாவது ஒரு அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications