பள்ளியின் கூரை இடிந்து 7 குழந்தைகள் காயம்: தலைமை ஆசிரியை கைது
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளிதலைமை ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் கீழ வண்டிக்காரன் தெருவில் பாரத மாதா நடுநிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும்பள்ளியாகும். இந்தப் பள்ளியின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இதில் வகுப்பில் இருந்த 7 மாணவ, மாணவியர்படுகாயமடைந்தனர்.
காயமடைந்த குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின்தலைமை ஆசிரியை ஸ்ரீதேவியை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
சென்னையில் தலைமறைவாக இருக்கும் பள்ளித் தாளாளர் செல்வராஜை கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படு மோசமாக இருந்த காரணத்தால்தான் இந்த அசம்பாவிதம்நடந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காயமடைந்த குழந்தைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முகமணி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதே தஞ்சைமாவட்டம் கும்பகோணத்தில்தான் கடந்த ஆண்டு 94 பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் கருகி இறந்தன.












Click it and Unblock the Notifications