40 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை!
சென்னை:
2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட 40 பேர் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளைதாக்கல் செய்யாததால், அவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணைய செயலாளர் தபஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 40 வேட்பாளர்கள், குறித்த காலத்திற்குள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளைதேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை.
இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.
அரக்கோணம், வேலூர், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் தலா 6 பேர், திருச்செங்கோட்டில் 5 பேர், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி,சிவகாசி ஆகிய தொகுதிகளில் தலா 3 பேர், கோபிச்செட்டிப்பாளையம், தஞ்சாவூரில் தலா 2 பேர் மற்றும் கோவை, பொள்ளாச்சி,பெரியகுளம், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தலா ஒருவரும் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications