ஜீவஜோதி கடத்தல் வழக்கு விசாரணை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
திருத்துறைப்பூண்டி:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியை கடத்திய வழக்கு தொடர்பான விசாரணை இன்றுதிருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 2003ம் ஆண்டு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தில் உள்ள ஜீவஜோதியின்வீட்டிலிருந்து அவரைக் கடத்தியதாக ராஜகோபால், அவரது வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபால் தவிர மற்ற அனைவரும் ஆஜராகினர். இதைத் தொடர்ந்துவருகிற 18ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications